நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொடூர கொலை... முதன் முறையாக குற்றவாளிகள் நேரில் ஆஜர்

x

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முதன் முறையாக குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் இளைஞரையும், விவேகானந்தன் என்ற முதியவரையும் கைது செய்தனர். மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகளுக்காக எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகாததால் வழக்கு விசாரணைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு சார்பில் கொலையாளிகளுக்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.இதனால் கடந்த ஐந்து மாதமாக கொலையாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடாமல் இருந்த நிலையில், முதல் முறையாக இன்று நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முதல் விசாரணையில் கொலையாளிகளிடம் சில கேள்விகளை கேட்ட நீதிபதி சுமதி, மீண்டும் இருவரையும் செப்டம்பர்-19 ஆம் தேதி நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்