திருந்தாத கேரளா... மீண்டும் சேட்டன்கள் சேட்டை... டேஞ்சரான கழிவுகளுடன் வந்த லாரி சிறைபிடிப்பு
பல்லடம் அருகே மருத்துவ கழிவுகளோடு வந்த கேரள லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். திருப்பூர் மாவட்டம், வேலப்பக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் தோட்டத்தில், தொடர்ச்சியாக கேரள மருத்துவக் கழிவுகள் எரியூட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கழிவுகளுடன் வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியையும், அதில் வந்த 3 பேரையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும், குடோனில் உள்ள அனைத்து கழிவுகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story