அடுத்த சர்ச்சையில் சிக்கிய பிரபல S S ஹைதராபாத் பிரியாணி ஹோட்டல் - சென்னையில் தீயாய் பரவும் வீடியோ

x

சென்னையில் பிரபல பிரியாணி உணவகமான எஸ் எஸ் ஹைதராபாத் உணவகத்தில் உணவுக் கழிவுகளை கழிவு நீர் கால்வாயில் கொட்டும் ஊழியர்களால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இதே கடையில் சாப்பிட்ட 35 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 14 நாட்களுக்குள் குறைகளை சரி செய்ய சொல்லி அதிகாரிகள் இக்கடைக்கு சீல் வைத்தனர் . இந்நிலையில் தம்பு செட்டி தெருவில் இருக்கும் எஸ் எஸ் ஹைதராபாத் உணவகத்தில் உணவுக் கழிவுகளை ஊழியர்கள் சிலர் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடியை அகற்றி சட்டத்திற்கு புறம்பாக அதில் கொட்டுவது தெரிய வந்துள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்