"ஹெலிகாப்டரில் பணம்..?" CM-க்கே ஜெர்க் கொடுத்த அதிகாரிகள்... உடைமைகளை ஓபன் செய்து அதிரடி ரெய்டு

x

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் உடைமைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக சோதனையிட்டனர். ஏக்நாத் ஷிண்டே ஏராளமான பணத்துடன் ஹெலிகாப்டர் மூலம் நாசிக் சென்றதாக, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், நாசிக்கில் ஏக்நாத் ஷிண்டே சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, அவரது உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அதில், ஏக்நாத் ஷிண்டேவின் உடைகளும், மருந்துப் பொருட்களும் இருந்தது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்