பெண் மருத்துவர் கொலை - விரைவில் சிபிஐ மேல்முறையீடு
பெண் மருத்துவர் கொலை - விரைவில் சிபிஐ மேல்முறையீடு
- கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேற்குவங்க அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என அண்மையில் கூறியிருந்த நிலையில், விரைவில் சிபிஐ முறையிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
- இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை, வரும் 29-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
Next Story