நாட்டை பதற விட்ட கேரளா கோரம் - குண்டுவெடிப்புக்கு சில வினாடிகளுக்கு முன்.. வெளியானது முக்கிய காட்சி

x

கேரள மாநிலம் கலாமா சேரி பகுதியில் ஒரு பெண் பலியானதோடு 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்த சம்பவம் கேரளாவை மட்டுமின்றி இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் வெடிகுண்டு வெடிப்பதற்கு சற்று முன்னதாக ஜெபக்கூட்டம் நடைபெற்ற பகுதியிலிருந்து நீல கலர் கார் ஒன்று அங்கிருந்து புறப்பட்டு சென்றது காரில் சென்றவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாமா என்ற அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நீல கலர் கார் அங்கிருந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காலை 9.40 மணிக்கு வெடிகுண்டு வெடித்த நிலையில் 9.37 மணிக்கு அந்த கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த காரின் பதிவு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் ஒரு பெண்ணுக்கு சொந்தமான கார் என தெரிய வந்துள்ளது ஆனால் அவரது கார் தான் இங்கு வந்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை. போலி பதிவெண்ணுடன் வந்த காரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நீல நிற காரில் நம்பர் போலியானது அதே நம்பரில் வெள்ளை நிற கார் உரிமையாளரின் வீட்டின் முன் நின்று கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்