29 பேரின் உயிரை பறித்த வெயில் - வெளியான அதிர்ச்சி தகவல்

x

வட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 45 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது. வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், வெப்ப அலை காரணமாக Heat stroke எனப்படும் வெப்ப வாதத்திற்கு பீகார் மாநிலத்தில் மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 5 பேரும், ஜார்க்கண்ட்டில் 4 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், தாய் மற்றும் பாட்டிக்கு மருந்து வாங்க சென்ற 2 சிறுவர்கள் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்