குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு - முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

x

டெல்லி அலிபூரில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விபத்தில் சிக்கி 11 பேர் இறந்துவிட்டதாகவும், 4 பேர் படுகாயம் அடைந்துவிட்டதாகவும் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 20, ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்