நாட்டையே பரபரப்பாக்கிய விவகாரம்... அடிபடும் பல ஸ்டார் நடிகர்கள், VVIP-க்கள் பெயர்

x

டெல்லியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நடிகர், நடிகைகளுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் நேற்று முன்தினம் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த துஷார் கோயல் என்பவர் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் துபாயில் இருந்து கடத்திவரப்பட்டதாகவும், இந்த கும்பலின் தலைவன் துபாயில் இருந்து செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும், டெல்லி, மும்பை, கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் போதைப் பொருட்களை விநியோகம் செய்ய பதுக்கி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இந்த இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் செல்வந்தர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை குறிவைத்து போதைப்பொருள் வியாபாரத்தை கடத்தல் கும்பல் முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story

மேலும் செய்திகள்