காலை 9 மணி தலைப்பு செய்திகள் (22-10-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

கொல்கத்தாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 17 நாட்களாக நீடித்து வந்த மருத்துவர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்..

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பணிக்கு திரும்பினர்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு..

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை காவல்துறை தகவல்....

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...

மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என எச்சரிக்கை....

மதுரையில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல தேங்கிய மழைநீர்...

பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி...

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை....

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்