காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (07-10-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னையில் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற ஐந்து பேர் உயிரிழந்த பரிதாபம்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதி..

வான் படை சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்ததற்கு, தமிழக அரசு உரிய முன்னேற்பாடுகள் செய்யாததே காரணம்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு..

வான்சாகச நிகழ்ச்சியின்போது ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.

அதிமுக, பாமக, பாஜக, விசிக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்.

சென்னையில் நேற்று ஒரே நாளில், பறக்கும் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்.

வான் சாகச நிகழ்ச்சிக்கு சென்றுவர குவிந்தவர்களால் ரயில் நிலையங்கள் திக்குமுக்காடிய நிலையில், தெற்கு ரயில்வே தகவல்..

சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அப்புறப்படுத்தும் மாநகராட்சி..

பல ஆண்டுகளாக மீன் கடைகள் நடத்தும் தங்களுக்கு டோக்கன் தரவில்லை பாதிக்கப்பட்டவர்கள்


Next Story

மேலும் செய்திகள்