நேற்று அந்நியனாக மாறி வெறியோடு தாக்கிய பெண்கள்.. இன்றோ தப்பே பண்ணல என அய்யோ.. அம்மா என கதறல்

x

நேற்று அந்நியனாக மாறி வெறியோடு தாக்கிய பெண்கள்.. இன்றோ தப்பே பண்ணல என அய்யோ.. அம்மா என கதறல்


மாமல்லபுரத்தில், காவலாளி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். முடிச்சூர் பகுதியை சேர்த்த பிரபு இன்பதாஸ் - கீர்த்தனா, மறைமலைநகரை சேர்ந்த சண்முகப்பிரியா, அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் காரில், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். ஐந்து ரதம் செல்லும் சாலையில் சென்றபோது, காரை நிறுத்துவது தொடர்பாக, அங்கு காவலில் இருந்த ஏழுமலை என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏழுமலை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படும் நிலையில், காரில் இருந்து இறங்கி வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

ஏழுமலை அளித்த புகாரின்பேரில், 4 பேர் மீதும் மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், 3 பேரை கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மூவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க திருப்போரூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அனுபிரியா உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட பெண்கள், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது, இணையத்தில் வீடியோ எடிட்டிங் செய்து ஒருதலைபட்சமாக பதிவிடப்பட்டுள்ளதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதால் தாக்கியதாகவும் கண்ணீர்மல்க தெரிவித்தனர். பிரபு இன்பதாஸ் செங்கல்பட்டு சிறையிலும், இரண்டு பெண்கள் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர். சண்முகபிரியாவின் கணவர் கிருஷ்ணாமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்