நடிகை ஸ்ரீதேவி வாழ்ந்த பகுதியில் திடீர் மாற்றம் | Sridevi

x

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக, லோகண்ட்வாலா சந்திப்புக்கு அவரது பெயரை மும்பை மாநகராட்சி சூட்டியுள்ளது. இந்திய திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018-ஆம் ஆண்டு காலமானார். ஸ்ரீதேவியை கவுரப்படுத்துமாறு அவர் வசித்த பகுதியில் இருந்த மக்கள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மும்பையில் உள்ள லோகண்ட்வாலா சந்திப்புக்கு, ஸ்ரீதேவி கபூர் சவுக் என பெயரிட்டு மும்பை மாநகராட்சி கவுரவப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்