நேராகவே வந்து வாய் விட்டு கேட்ட SPB மகன்.. முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் முதல்வர்

x

சென்னையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நீண்ட காலம் வசித்த பகுதிக்கு அவரது பெயரை சூட்ட கோரி, முதலமைச்சர் அலுவலகத்தில் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை மனு அளித்துள்ளார்.. இதுகுறித்து, எஸ்.பி.பி. சரண் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை பார்க்கலாம்...

எஸ் பி பி அவர்கள் நீண்ட காலம் வசித்த காம்தார் நகர் பகுதியை "எஸ் பி பாலசுப்ரமணியம்" நகர் என பெயர் வைக்க அவரது மகன் எஸ்பிபி சரண் முதலமைச்சர் அலுவலகத்தில்

கோரிக்கை மனு அளித்தார்

நீண்ட நெடும் காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து அவர்களின் மாறா அன்பை பெற்ற மறைந்த திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவை போற்றும் வகையில் அவர் இறுதி மூச்சு வரையில், நீண்ட காலம் வாழ்ந்த சென்னை 600034, காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியினை "எஸ் பி பாலசுப்ரமணியம்" நகர் அல்லது வீதி என பெயர் மாற்றம் செய்திட உரிய ஆவணம் செய்யுமாறு அவருடைய ரசிகன் என்ற முறையிலும், மகன் என்ற முறையிலும், என் சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் மிகவும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் கனிவான பார்வைக்கு கொண்டு வர கடமை பட்டிருக்கிறேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்

எஸ்பிபி சரண் பேட்டி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்