நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் என பெயர்சூட்டியுள்ளார்

x

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜூன் 2 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்த செய்தியை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த சிவகார்த்திகேயன், தனது முதல் இரண்டு குழந்தைகளுக்கும் தந்த அன்பையும் ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கு தர வேண்டுகிறோம் என பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தனது மூன்றாவது குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன், அக்குழந்தைக்கு பவன் என பெயர்சூட்டியுள்ளார்.

இந்த விழாவில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர். பெயர் சூட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்