காதல் நாயகன் டூ வசீகர வில்லன் - 54வது பிறந்தநாளை கொண்டாடும் அரவிந்த்சாமி

x

சாக்லேட் பாய் என்ற ஒரு வார்த்தை சொல்லாடலில் வருவதற்கு முன்னரே, கோலிவுட்டில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அரவிந்த் சாமி....

தனக்கு அரவிந்த் சாமி போன்ற மாப்பிள்ளை தான் வேண்டும் என இளம்பெண்கள் அடம்பிடிக்கும் அளவிற்கு கனவு கண்ணனாக வலம் வந்தவர் அரவிந்த் சாமி..

திருச்சியில், தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு மகனாக பிறந்த அரவிந்த் சாமி, தமது மாமாவிடம் வளர்ந்தார்.

சென்னையில் இளங்கலை படிப்பை முடித்து, முதுகலை பட்டத்திற்காக அமெரிக்கா சென்றவர் பின்னர் தாயின் உடல்நலம் குன்றியதால் தமிழகம் வந்தார்..

இதன் பின், இயக்குநர் மணிரத்னத்தின் தளபதி படத்தில் ரஜினியின் சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்த அவர், அடுத்தடுத்து மணிரத்னம் இயக்கத்திலேயே நடித்தார்.

ரோஜா திரைப்படத்தில் காதல் மனைவியுடன் அரவிந்த் சாமியின் ரொமான்ஸ் மட்டுமன்றி, பிரிந்த மனைவியை நினைத்து உருகியதும் ஆடியன்ஸ்-ஐ உருகச் செய்தது..


Next Story

மேலும் செய்திகள்