தாலி கட்டும் முன் அமிதாப் பச்சன் போட்ட கண்டிஷன்.. ஐஸ்வர்யா - பச்சன் பிரிவுக்கு காரணமா?

x

பிளாக் அன்ட் ஒயிட் காலம் தொடங்கி தற்போதைய ஏஐ காலம் வரை பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன்..

பாலிவுட்டின் Big B என செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன், 70களில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயாவை திருமணம் செய்து கொண்டார்..

தற்போதும் லவ் பேர்ட்ஸ் ஆக வலம் வரும் அமிதாப்-ஜெயா ஜோடி தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்க, அண்மையில் நேர்காணல் ஒன்றில் ஜெயா பச்சன் பேசியது பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது..

காதலர்களாக இருந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது அமிதாப் பச்சன் ஒரு கண்டிஷன் போட்டதாக கூறியுள்ளார்..

திருமணத்திற்கு பின் தனது மனைவி எப்போதும் போல் 9 முதல் 5 மணி வரையிலான பணிக்கு செல்வதை விரும்பவில்லை என தெரிவித்த அமிதாப், எந்தெந்த படங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டு நன்கு அறிந்த நபர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கண்டிஷன் முன் வைத்துள்ளார்..

ஆனால், பல நேர்காணலில் ஜெயா பச்சன் தன்னிச்சையாக படங்களை விட குடும்பத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார் என அமிதாப் பச்சன் பேசியிருந்ததை சுட்டிக்காட்டி பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அதே வேளையில், இதே காரணத்திற்காக தான் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே விரிசல் ஏற்பட்டு இருக்குமோ என்ற கோணத்திலும் கேள்விகளை முன் வைக்கின்றனர்..

காரணம், 2007ல் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு திருமணமான நிலையில், அதன் பின்னரும் பல படங்களில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய்...

தமிழில் ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், அண்மையில் கூட பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்..

இந்நிலையில் தங்கள் குடும்பத்தின் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நெறிமுறைகளை கடந்து படத்தில் நடித்து வருவதே விரிசலுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்