"ஆம் ஆத்மி அரசு அமைந்தால்.." அடித்து சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்

x

"ஆம் ஆத்மி அரசு அமைந்தால்.." அடித்து சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்

#arvindkejriwal #thanthitv

அம்மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கர்னால் பகுதியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது,

ஹரியானா மக்களுக்கு ஐந்து விதமான உத்தரவாதங்களை வழங்குவதாக தெரிவித்தார்.

24 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படுவதோடு நிலுவையில் உள்ள அனைத்து மின் கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். குழந்தைகளின் கல்விக்காக மிகச்சிறந்த அரசு பள்ளிகள் கட்டப்படும் என்றும் கூறினார். பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் உள்ளிட்ட ஐந்து உத்தரவாதங்களை வழங்குவதாக தெரிவித்தார். இது தனது பொறுப்பு என்று கெஜ்ரிவால் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்