இன்றைய தலைப்பு செய்திகள் (18-10-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

x

சென்னை தூர்தர்ஷன் வளாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து...

சென்னையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ள நிலையில், தனக்கு எதிராக இனவாத கருத்துகள் முன்வைக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். அண்மைத் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் பிரகாஷ்...

பிரகாஷ், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்பட்டுள்ளதா? இதுபற்றிய கூடுதல் விவரங்கள் சொல்லுங்க.

நெல்லையில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பயிற்சியாளர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செய்தியாளர் ராமசுந்தரம் வழங்கிய தகவல்கள் இவை..

பிரபல யூடியூபர், சாப்ட்வேர் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டால் சர்ச்சை..


Next Story

மேலும் செய்திகள்