மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (15-10-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது...

கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக, வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி...

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சியில் மிக கனமழை பெய்யும்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும்

வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்..

அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளி​ட்ட 12 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்..

சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் பேட்டி..

அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்..

வடகிழக்கு பருவமழை தற்போது வரை, இயல்பை விட 84 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக, வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்