ஏரியில் மீன் பிடித்தபோது மின்னல் தாக்கி இளைஞர் பலி - சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு தீவிர சிகிச்சை

x

ஏரியில் மீன் பிடித்தபோது மின்னல் தாக்கி இளைஞர் பலி - சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு தீவிர சிகிச்சை

துறையூர் அருகே ஏரிக்கு மீன்பிடிக்க சென்றபோது மின்னல் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் சிக்கத்தம்பூர் ஏரியில் மீன்பிடிப்பதற்காக ஒட்டம்பட்டியை சேர்ந்த நாகராஜ், அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் சென்றுள்ளார். ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கி நாகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சிறுவர்கள் உட்பட 6 பேரும் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்