இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்வாரா ஈபிஎஸ்?- அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை

x

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்த, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என உத்தரவிடக் கோரி, ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு, கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை காரணம் காட்டி கட்சி விதிகளின் மாற்றத்தை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுப்பதாகவும், நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், ஈபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வாதாடிய ஓபிஎஸ் தரப்பு, தங்கள் தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் இல்லாததால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்