ஏன் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்குறீங்க?பழைய சாலையை வெட்டி எடுக்காமல் புதிய சாலை..கொதித்தெழுந்த இளைஞர்

x

திருப்பூர் 42-ஆவது வார்டில் பழைய சாலையை வெட்டி எடுக்காமல் புதிய தார்ச்சாலை போடப்பட்டதால், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர், ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். புதிய தார்ச்சாலை போடப்படும் இடத்துக்கு வந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்த நிர்வாகி அருண்குமார், இவ்வாறு சாலை அமைத்தால், வீட்டுக்குள் மழைநீர் வரும் என்று ஒப்பந்ததாரரிடம் கூறினார். அதற்கு மாநகராட்சி ஆணையர் கூறியபடிதான் சாலை அமைப்பதாக ஒப்பந்ததாரர் பதில் அளித்தார். இந்த காட்சிகளை வீடியோ எடுத்த அருண்குமார், இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்பதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்