"மயானத்திற்கு நிரந்தர பாதை வேண்டும்" - உயிரிழந்த மூதாட்டி உடலுடன் உறவினர்கள் போராட்டம்

x

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உயிரிழந்த மூதாட்டியின் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேரையூர் அருகே சிலைமலைபட்டி கிராமத்தில் மூதாட்டி காளியம்மாள் என்பவர் உயிரிழந்தார்.

அப்போது அருந்ததிய சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மயானத்திற்கு நிரந்தர பாதை வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவலறிந்த பேரையூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் இலக்கியா ஆகியோர் உயிரிழந்த காளியம்மாள் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர் .

அப்போது போராட்டக்காரர்கள் காவல்துறை மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினரே மூதாட்டியின் உடலை இறுதி சடங்கிற்கான வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்