விசிக நிர்வாகி கொலை... 4 பேருக்கு வெளியான பரபர தீர்ப்பு

x

புதுச்சேரியில் வி.சி.க. நிர்வாகி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கரையான்பேட்டை பகுதியை சேர்ந்த விசிக நிர்வாகி இளவரசன் 2018 ஜூலையில் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு, தலா 9,500 ரூபாய் அபராதமும் விதித்தது. அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை எனவும் தீர்ப்பளித்தது. வழக்கில் தலைமறைவாக உள்ள அருள் பாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்