தஞ்சாவூரில் மது அருந்தி இருவர் பலி - "இன்று இரவுக்குள் விசாரணை முடிவடையும்"

x

தஞ்சாவூரில் மது குடித்து உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினர் 6வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் மது குடித்து உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினர் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். பல்வேறு தரப்பினரிடம் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தினர். இன்று 6வது நாளாக உயிரிழந்த விவேக்கின் நண்பர் தமிழரசன் மற்றும் பாரின் உரிமையாளர் பழனிவேல், காமராஜ் உள்ளிட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து,

இன்று மாலை அல்லது இரவுக்குள் இந்த விசாரணை முடிவடையும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்