Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-10-2022) | Morning Headlines | Thanthi TV
கோவை சம்பவம் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை...மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் பரிந்துரை செய்வதாக விளக்கம்...
உளவுத்துறையில் கூடுதல் அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவர்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...கோவையில் சிறப்பு காவல் படை உருவாக்கவும், கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை அமைக்கவும் உத்தரவு
கோவை சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கு மாற்ற பரிந்துரைத்த விவகாரம்...தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு...
கோவை சம்பவத்தில் கைதான 5 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்..கைதான 5 பேரில் ஒருவர், அல்உம்மா தீவிரவாத அமைப்பின் தலைவர் பாட்ஷாவின் உறவினர் என தகவல்...
குற்ற செயல்கள் நடப்பது போல் தெரிந்தால் மாவட்ட நிர்வாகத்தை அணுக வேண்டும்...ஜமாத்துகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுரை..
கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்துக்கு அனைத்து ஜமாத்துகள் கண்டனம்...காவல்துறையுடன் இணைந்து இளைஞர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாகவும் தகவல்...
கோவையை பாதுகாக்க வலியுறுத்தி பாஜக சார்பாக, கோவை மாநகரில் வரும் 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்...திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் பங்கேற்க வருமாறு அழைப்பு...
வாடகைத் தாய் மூலமாக நயன்தாரா குழந்தை பெற்ற விவகாரத்தில் விதி மீறல் இல்லை என சுகாதாரத் துறை குழு அறிக்கையில் தகவல்...அரசு வழிகாட்டு நெறிமுறைகள் அமலாகும் முன்பே வாடகைத் தாயை ஏற்பாடு செய்ததாகவும் அறிக்கையில் தகவல்..
2016ஆம் ஆண்டிலேயே நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்...வாடகைத் தாய்க்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதாகவும் தகவல்...
நயன்தாராவின் குழந்தைகள் பிறந்த, தனியார் மருத்துவமனையில் ஆவணங்களை சரியான முறையில் பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு...ஐசிஎம்ஆர் வழிகாட்டு முறைகளை பின்பற்றாததால், மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என நோட்டீஸ்...
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நெதர்லாந்து அணியுடன் இந்தியா இன்று மோதல்...குரூப் 2 பிரிவின் புள்ளிப் பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருக்கிறது, இந்திய அணி...