TNPL 2024 - மழையால் ரத்தான போட்டி | TNPL 2024

x

TNPL 2024 - மழையால் ரத்தான போட்டி

டி.என்.பி.எல். தொடரின் மதுரை, நெல்லை இடையேயான போட்டி, மழை குறுக்கிட்டதால் ரத்து செய்யபப்பட்டது.

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 14வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. மழை காரணமாக இந்த போட்டியானது, ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் கால தாமதம் ஆனது. இதனையடுத்து, ஆட்டமானது, 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர், டாஸ் வென்ற மதுரை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களம் இறங்கிய நெல்லை அணி, 3.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து, 19 ரன்களை எடுத்தபோது, மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனையடுத்து, ஆட்டமானது 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பிறகு 5.2 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்களை நெல்லை அணி எடுத்திருந்த போது, மறுபடியும் மழை குறுக்கிட்டது. இந்நிலையில், போட்டியானது ரத்து செய்யப்பட்டு, இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்