செய்தியாளருக்கு தகவல் தந்த இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் - திருப்பூரில் பரபரப்பு | Thiruppur

x
  • பல்லடத்தில், சாலையில் நடந்த பிரச்னை குறித்து செய்தியாளருக்கு தகவல் கொடுத்த இளைஞரை, போலீசார் சரமாரியாக தாக்கினர்.
  • மாணிக்கபுரம் சாலை பிரிவு அருகே, தகராறு ஏற்பட்டது குறித்து அந்த வழியாக நடந்து சென்ற முத்து வளவன் என்பவர், செய்தியாளருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.
  • இதனால் ஆத்திரமடைந்த போலீசார், முத்து வளவனை கடுமையாக தாக்கியதுடன், பேருந்து நிலையம் அருகே அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
  • உடல் முழுக்க ரத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர், தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்