இந்த பக்கம் அமைச்சர், அந்த பக்கம் MLA வீடு.. "ஆனால் ரோடு.. 2 வருசமா ரொம்ப கஷ்டப்படுறோம்" - குமுறும் கன்னியாகுமரி மக்கள்!

x

கன்னியாகுமரி அருகே சுமார் இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்து இருக்கும் சாலையை, சீரமைக்க வேண்டுமன பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பாலூரில் இருந்து மூசாரி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதியில், நியாவிலைக்கடை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்து வருகின்றனர். மேலும், கனரக வாகனங்கள் செல்வதாலும், இந்த சாலை மேலும் சேதமடைவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக, அமைச்சர் மனோ தங்கராஜ் வீடு, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் வீடு ஆகியவை இதே பகுதியில் இருக்கும் நிலையிலும், சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்