தினமும் அடி.. உதை - 2வது தந்தையின் சித்திரவதையால் உயிரிழந்த குழந்தை-திருமணத்தை மீறிய உறவால் விபரீதம்

x

ஆரணி அருகே திருமணத்தை மீறிய உறவில், 2 வயது ஆண் குழந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், காங்கரனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவருக்கும் குணசேகரன் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் ஜெயசுதா கருவுற்றிருந்த போது, கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில், ஜெயசுதாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஜெயசுதா தனது தாயாருடன் வசித்து வந்த போது, மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், ஜெயசுதா மற்றும் மாணிக்கம் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர். இதையடுத்து மாணிக்கம், ஜெயசுதாவின் 2 வயது ஆண் குழந்தையை தினமும் கொடூரமாகத் தாக்கி வந்துள்ளார். இந்தத் தாக்குதலில் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தை, உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது. குழந்தையின் தாயார் ஜெயசுதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்