கார்த்திகை தீபம் இரண்டாம் நாள்.. 16 கால் மண்டபத்தில் எழுந்தருளுரிய பஞ்ச மூர்த்திகள்

x

கார்த்திகை தீப திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானங்களில் வீதி உலா சென்றனர். நேற்று இரவு விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் 16 கால் மண்டபத்தில் எழுந்தருளுரிய பஞ்ச மூர்த்திகளுக்கும் தீபாரதனைகள் காட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து வெள்ளி இந்திர விமானங்களில் அமர்ந்து பஞ்சமூர்த்திகள் மாட வீதிகளில் உலா சென்றனர். அப்போது, திரளான பக்தர்கள் பங்கெற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்