"ஏற்கனவே போடப்பட்ட சிறுபாலங்களுக்கு மீண்டும் டெண்டர்"... தொடர் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள்

x

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டில் நடைபெற்ற பூங்கா புதுபிக்கும் பணியில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல் திருநின்றவூர் 27 வது வார்டில் சிறு பாலங்கள் அமைத்து மூன்றே மாதம் ஆன நிலையில், அதனை மறைத்து மீண்டும் சிறு பாலங்கள் அமைக்க மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தும் அதிகாரிகள் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட திருநின்றவூரில் இதுவரை நிரந்தர பொறியாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் நகர அமைப்பு ஆய்வாளர் அமைக்கப்படவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்