பஸ்ஸில் திடீரென அந்தரங்க உறுப்பை காட்டிய இளைஞர் - கத்தி கூச்சலிட்ட இளம் நடிகை.. - அரசுப் பேருந்தில் அதிர்ச்சி சம்பவம்

x

கேரளாவில் பட்டப்பகலில் அரசு பேருந்தில் பயணித்த இளம் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா சினிமா இளம் நட்சத்திரம் ஒருவர், திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு படப்பிடிப்புக்காக அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். அங்கமாலி என்ற இடத்தில் பேருந்தில் ஏறிய இளைஞர், நடிகையிடம் பேசுக்கொடுத்து, தொட்டு பேசியதோடு, அந்தரங்க உறுப்பையும் காட்டியுள்ளார். உடனே, நடிகை தனது போனில் வீடியோவை ஆன் செய்து, அந்த இளைஞரிடம் கேள்வி கேட்டதும், பேருந்தில் இருந்து இறங்க இளைஞர் முயன்றார். பேருந்து நின்றதும் எகிறி குதித்து தப்பியோடிய இளைஞரை, நடத்துனரும், சக பயணிகளும் துரத்திச் சென்று பிடித்து, நெடும்பஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர். இந்த இளைஞர் கோழிக்கோட்டை சேர்ந்த சவாத் என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த சம்வத்தில் தனக்கு உதவிய பேருந்து ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுக்கு நன்றி தெரிவித்து நடிகை வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்