சாலையில் நடந்து சென்ற பெண்.. திடீரென இடிந்து விழுந்த பால்கனி - நொடியில் நடந்த பயங்கரம்

x

சென்னை காலடிபேட்டை பகுதியில், பாழடைந்த வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில், நடந்து சென்ற பெண் ஒருவர் காயமடைந்தார். காலடிப்பேட்டை மேற்கு மாட வீதி மற்றும் பாலகிருஷ்ணா நகர் இணைப்பு சாலையில் இருந்த இரண்டு அடுக்கு கொண்ட வீடு ஒன்றின் பால்கனி திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், அவ்வழியாக சென்ற பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடுப்புகளை அமைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்