மாதவிடாய் கால விடுமுறை வழங்கக் கோரிய பொதுநல மனு... விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

x

மாதவிடாய் கால விடுமுறை வழங்க கோரிய பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது விடுமுறை வழங்கும் விதிகளை வகுக்க மாநில அரசுக்கு உத்தரவிடக் கோடி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இது மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் என்பதால் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் மனுதாரர் முறையிடுவது பொருத்தமாக இருக்கும் எனவும், மாதவிடாய் காலத்தின் போது விடுமுறை அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டால், பெண்களைப் பணியமர்த்தும் ஊக்கத்திற்கு தடையாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்