திடீரென வெடித்து சிதறிய ஃபிரிட்ஜ்..! 3பேர் பலி; ஆபத்தான நிலையில் இருவர் - சென்னையில் அதிர்ச்சி

x

ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராதா. நேற்று இரவு இவரது வீட்டில் ராதாவின் சகோதரி கிரிஜா, சகோதரர் ராஜ்குமார் மற்றும் ராஜ்குமாரின் மனைவி பார்கவி, குழந்தை ஆர்த்தி ஆகிய 5 பேர் தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென குளிர்சாதனப் பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சத்தத்தால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே போலீசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஒரு அறையில் ராதா, கிரிஜா மற்றும் ராஜ்குமார் ஆகிய மூன்று பேர் மூச்சுத்திணறி இறந்த நிலையில் கிடந்துள்ளனர். மற்றொரு அறையில் பார்கவி மற்றும் அவரது குழந்தை ஆர்த்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். 5பேரையும் மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்