"தெரியாம எப்படிடா கைய விட்டு நோண்டுவ".. அரசு பஸ்ஸுக்குள் அசிங்கம் செய்த நபர்.. சகட்டுமேனிக்கு திட்டி பொளந்த பெண்

x

திருப்பூர் அருகே அரசு பேருந்தில் கணவனுடன் பயணித்த பெண்ணிடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை, பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கணவர் மற்றும் குழந்தையுடன் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பெண்ணிடம், பின் இருக்கையில் அமர்ந்திருந்த சங்கர் கணேஷ் என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், கணவர் மற்றும் நடத்துனரிடம் புகார் தெரிவிக்கவே, சக பயணிகள் அவரை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். தம்பதி கொடுத்த புகாரின் அடிப்படையில் நபர் மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story

மேலும் செய்திகள்