முறுக்கு சுட்டு வாக்கு சேகரித்த அமைச்சர்.. இட்லி சுட்டு ஆதரவு கேட்ட மாஜி அமைச்சர் - இடைத்தேர்தல் சுவாரஸ்யங்கள்

x

ஈரோட்டில் பலகாரக் கடையில் ஜிலேபி சுட்டு, முறுக்கு விற்பனையில் ஈடுபட்டு நூதன முறையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, முனுசிபல் குடியிருப்பு பகுதியில் அவர் வீதி வீதியாக சென்று பரப்புரை மேற்கொண்டார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் மாஸ்தான், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்த அந்த பகுதியில் உள்ள பலகார கடைக்கு சென்ற அவர், ஜிலேபி போட்டுக் கொடுத்தும், முறுக்கு விற்றும் வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்