தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்...4 பேரை காவு வாங்கிய துப்பாக்கிச்சூடு..அதிரவைக்கும் புள்ளிவிவரம்

x

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். பிலடெல்பியா நகரின் வாரிங்டன் அவென்யூவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்துள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்