மலையில் இருந்து பள்ளத்தில் உருண்டோடிய அரசு பஸ்! - 35 பயணிகளுக்கு நேர்ந்த கதி..

x

மகாராஷ்ட்ராவில் , அரசுப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். நாசிக்கில் இருந்து இன்று காலை புறப்பட்ட அரசுப் பேருந்தில் 35 பேர் பயணித்தனர். சப்தசிருங்கி கோட்டையிலிருந்து புல்தானாவில் உள்ள கம்கான் நகருக்கு பேருந்து திரும்பியபோது, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்தார். ஓட்டுநர் உட்பட காயமடைந்தவர்களை உள்ளூர்வாசிகள் மற்றும் போலீசார் மீட்டனர். மூடுபனி, மழை மற்றும் மலைப்பாதையில் கடினமான திருப்பங்கள் காரணமாக விபத்து நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்