பேச மறுத்த சிறுமியை... பிளேடால் தாக்கிய கொடூர இளைஞன்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். டீச்சர்ஸ் காலணி அருகே சென்றபோது, மாணவியை வழிமறித்த வி.எஸ்.கே. நகர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் பார்கவ் என்ற இளைஞர், மாணவியை தன்னுடன் பேசி பழகுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, பதிலேதும் கூறாமல் அந்த இடத்தை விட்டு கடக்க முயன்றபோது, மாணவியை இளைஞர் பிளேடால் அறுத்து தாக்க வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவி, கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்த நிலையில், இளைஞர் கிறிஸ்டோபர் பார்கவை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்