"சுதந்திர போராட்டம் துவங்கிய இடம் தமிழகம் தான்".."இது ஆன்மிகத்தின் தலைநகர்" - ஆளுநர் பேச்சு

x

ஆளுநரின் எண்ணித் துணிக திட்டத்தின் கீழ் படைவீரர்கள், வீர மங்கையர்கள் மற்றும் வீரதீர பதக்கங்கள் பெற்ற முப்படை ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய

ஆளுநர் ரவி, இந்தியாவில் தேசபக்தி, தெய்வபக்தி இரண்டையும் பிரிக்க முடியாது என்றார். தமிழ்நாடு என்பது ஆன்மீகத்தின் தலைநகரம் மட்டும் இல்லை, இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை தொடங்கிய ஒரு இடம் என்றும் கூறினார். தமிழகத்தில் நமக்கு தெரியாத நூற்றுக்கணக்கான சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வீரர்கள் உள்ளதாக கூறிய அவர்,

ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மிகவும் கவுரவமாக நடத்தப்பட வேண்டும் என்றார். முன்னாள் ராணுவ வீரர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன் என அவர் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்