அடுத்தடுத்து விடுமுறைகள்.. திருநள்ளாறு கோவிலில் குவிந்த பக்தர்கள்.. பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் | Tirunallar temple

x

தொடர் விடுமுறை காரணமாக திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து விடுமுறைகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ளே திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் கூட்டம் காரணமாக முன்கூட்டியே நடை திறக்கப்பட்டு, அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலையில் கொட்டும் பனியிலும் கோவில் நலன் தீர்த்த குளத்தில் நீராடிய பக்தர்கள், 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சனிபகவானை தரிசனம் செய்தனர். பக்தர்களின் தொடர் வருகையால் திருநள்ளாறு பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்