ப்ரேமம் பாணியில் கல்லூரியில் சம்பவம்..மாணவி-னு நினைத்து பேராசிரியை ராகிங் -தட்டிக்கேட்ட சக மாணவர்கள்

x

சேலம் ஐந்து ரோட்டில் இருந்து ஜங்ஷன் ரயில்வே நிலையம் செல்லும் சாலையில், தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள், அடிக்கடி மாணவிகளை கிண்டல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களான திலான் மற்றும் விஷ்ணு ஆகிய இருவர், கல்லூரியில் பாடம் எடுக்கும் பேராசிரியை, மாணவி என்று நினைத்து ராக்கிங் செய்துள்ளனர்.

இதனை பார்த்துக் கோபமடைந்த சக மாணவர் கார்த்திகேயன், ராக்கிங் செய்த இரண்டு மாணவர்களையும் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த திலான் மற்றும் விஷ்ணு ஆகியோர், கார்த்திகேயனை சரமாரியாக தலையில் தாக்கியதில் காயமடைந்தார்.

அப்போது கார்த்திகேயன், சக கல்லூரி மாணவனான கவுதமை போனில் அழைத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அங்கு மாணவர்களுக்கிடையே அடிதடி சம்பவம் முற்றியது.

தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்த மாணவனை அழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ராக்கிங்கில் ஈடுபட்டு தகராறு செய்த திலான் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராகிங் சம்பவத்தில் அடிதடி ஏற்பட்டு, மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்