சென்ட்ரல்,எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை உயர்த்திய தெற்கு ரயில்வே

x

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1 ம் தேதி முதல் 2023 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரை நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில்,விழாக் காலங்கள் வருவதால் நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக கட்டணம் உயர்த்தியதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் , எழும்பூர் ரயில் நிலையம், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்