"விரைவில் மாநாடு காத்திருக்கிறது" - திருச்சியை திடீர் பரபரப்பாக்கிய விஜய் ரசிகர்களின் போஸ்டர்

x

"விரைவில் மாநாடு, காத்திருக்கிறது தமிழ்நாடு" என்ற வாசகத்துடன் திருச்சியில் விஜய் ரசிகர்கள் செய்த சுவர் விளம்பரம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், கடந்த சில தினங்களாக அரசியல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தி, அவரது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். இதனிடையே, ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் பகுதிகளில், ரசிகர்கள் சார்பில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. அதில், "விரைவில் மாநாடு காத்திருக்கிறது தமிழ்நாடு... வா தலைவா..." என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம், நடிகர் விஜய் விரைவில் திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்