60 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நாகாலாந்து..மேகாலயாவில்.. - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

x
  • நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் நாளை ஒரே கட்டமாக சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  • நாகலாந்தில் மொத்தம் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
  • காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க உள்ளனர்.
  • 60 தொகுதிகளுக்கு பாஜக, என்டிபிபி கட்சிகளை சேர்ந்த 183 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
  • இதேபோன்று மேகாலயாவிலும் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திடீரென ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 59 தொகுதிகளுக்கு 369 பேர் போட்டியிடுகின்றனர்.
  • இரு மாநிலங்களிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்