வீட்டுக்குள் துப்பாக்கிச் சூடு - 2 சிறுவர்கள் பலி.. 19 வயது இளைஞர் கைது

x

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் பே செயிண்ட் லூயிஸ் நகரில் வீட்டில் நடந்த பள்ளி மாணவர்களின் கேளிக்கை நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய 19 வயது இளைஞர் Cameron Everest-ஐப் போலீசார் கைது செய்தனர். இந்த வன்முறையில் 18 வயது மற்றும் 16 வயது சிறுவர்கள் பலியான நிலையில், மேலும் 6 சிறுவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்