விஜய் ஹசாரே கோப்பை...தட்டி தூக்கிய சவுராஸ்டிரா - ஓப்பனர் செய்த சம்பவம்

x

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுராஸ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்று உள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மகாராஷ்டிராவுடன் சவுராஸ்டிரா மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா, ருதுராஜ் கெக்ய்வாட்டின் சதத்தால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சவுராஸ்டிரா அணி, 47வது ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடக்க வீரர் ஜாக்சன் 133 ரன்கள் விளாசி, சவுராஸ்டிராவின் வெற்றிக்கு வித்திட்டார்.


Next Story

மேலும் செய்திகள்